விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.
ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை இந்த விக்கல் விட்டு விட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.
விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.
விக்கல் ஏன் ஏற்படுகிறது?
வயிற்றையும், மார்புப் பகுதியையும், டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல். தன்னிச்சையாக என்றால்...?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப் பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்
நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.
ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.
உதாரணம்: வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று காற்று வேகமாக வீசு கிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப் போத லாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக் கையில் ஈடுபட்டு விடுகிறது.
பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான்.
விக்கல் எப்படி ஏற்படுகிறது?
விக்கல் என்றால் என்ன? எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.
அதன் தசைநார்கள் திடீரெனவும் தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படும்போதே விக்கல் ஏற்படுகிறது.
தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவையோ இன்றி உங்கள் கட்டுப்பாட்டை மீறி தானகவே இன்றி நடக்கும் செயற்பாடு எனலாம்.
விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.
பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.
குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.
குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்சலையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படுத்தலாம்.
வீட்டுச் சிகிச்சை
அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக்கக் கூடும்.
உதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.
அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.
சில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந்துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon) போன்ற மருந்துகளும் உதவலாம். Chlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide
போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே வாங்கி உபயோகிக்கக் கூடாது.
மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.
குறுகிய நேர விக்கல்கள் பொதுவாக Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றன.
நீண்ட நாட்களுக்கு தொடரும் விக்கல்
ஆனால் நீண்ட நாட்களுக்குத் தொடரும் விக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். சில வேளைகளில் சற்று பாரதூரமான நோய்களாலும் ஏற்படுவதுண்டு.
மண்டை ஓட்டுக்குள் அழுத்தம் (Intra cranial Pressure) அதிகரிப்பது, மற்றும் சிறுநீரக நோய்களால் குருதியில் யூறியா (Blood Urea) அதிகரிப்பது ஆகியன காரணமாகலாம்.
எனவே நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் விக்கல் தொடர்ந்தால் மருத்துவரிடம் காட்டி முழுமையான பரிசோதனை செய்வது அவசியமாகும். காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்குவார்.
விக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறதாம்.
நீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும், நீராகாரம் உள் எடுப்பதையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவது உதவலாம்.
எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.
நன்றி: தினக்குரல்
டாக்டர் கந்தையா நவரத்தினம்
நடனமுருகன் வைத்திய நிலையம்.
யாழ்பாணம்.
செவ்வாய், 12 அக்டோபர், 2010
சனி, 28 ஆகஸ்ட், 2010
மக்கள் மருத்துவன்
மனம் நிறைந்தாய் மருத்துவனே.!
செந்தமிழின் தாயகமாம் யாழ்ப்பாணத்தில்
சேர்ந்த புகழ் சித்தவைத்தியத்தின் தொன்மைபேணி
வந்தவர்கள் போற்றும் வகை நல்ல கல்வி தந்து
உயர் கலைக் கோவில் ஆகும்
சித்த வைத்திய கல்லூரி வாழ்க வளர்;ந்திடுக
இந்த வகை புகழ் விளங்க துணையாய் நின்ற
செந்தமிழ்நூல் மக்கள் மருத்துவனே நின் புகழும்
நின்னை தந்த பேரறிஞ்ஞர் புகளும் நீடு வாழ்க.
மண்ணில் மக்கள் நல்லவண்ணம் வாழவேண்டி
வகையறிந்த பல அறிஞ்ஞர் ஒன்று கூடி
எண்ணினார் இயற்றினார் மக்கள் மருத்துவனாம்
வண்ணமலர் செய்தார் மக்கள்
திண்ணியராய் வாழும் செய்தியெலாம்
சொன்னதய்யா மருத்துவநூல் சிறந்துவாழ்க
கணணின் மணி எம் கல்லூரி குரலாய்யென்றும்
ஒலித்திடுக காலமெல்லாம் நிலைத்து வாழ்க.
நல்லரியமூலிகையின் குணங்கள் கண்டு
நன்மைமிகு மருத்துவமுறைகள் தந்தார்
சொல்லரிய சேதி எல்லாம் தந்து
மக்கள் நோய் தீர்க்கும் வழியும் செய்தார்
பல்லறிஞர் வியக்கும் வகை மருத்துவன் தான்
மக்கள் மனம் நிறைந்ததையா
எல்லோரும் போற்றுமிந்த புகழ் நூலை
தந்திடுவோர் தரணியில் சிறந்து வாழ்க
விஞ்ஞானம் வளர்ந்து பல புதுமை கண்டும்
மரபணுவில் கூட சிலர் மாற்றம் செய்தும்
எஞ்ஞான்றும் இளமையடன் இருக்கும்
சுதேசமருத்தவத்தின் புகழ் நூலே
யாழ்பாணத்தின் நல் வைத்தியர்கள்
கைளிலே வளர்ந்தாய்; வாழி.
மருத்துவனே நோய் தீர்க்கும் மருந்து தந்தாய்
மக்கள் மனங்களிலே நிறைந்தாய் வாழி.
நல்ல அரும் மருந்துகளின்
குணங்கள் கண்டு நோய்
வெல்ல பல முறைகள் சொன்னாய்
மக்கள் மருத்துவனே நின்னை காண
எல்லொரும் ஆசை கொண் டோம்
மாணவரின் முயற்ச்சியினால்
பல்லோரும் போற்றும் வகை.
வந்தாய் வாழி! வாழி!
ந.மணிகரன்
3ம் வருட மருத்துவ மாணவன்
செந்தமிழின் தாயகமாம் யாழ்ப்பாணத்தில்
சேர்ந்த புகழ் சித்தவைத்தியத்தின் தொன்மைபேணி
வந்தவர்கள் போற்றும் வகை நல்ல கல்வி தந்து
உயர் கலைக் கோவில் ஆகும்
சித்த வைத்திய கல்லூரி வாழ்க வளர்;ந்திடுக
இந்த வகை புகழ் விளங்க துணையாய் நின்ற
செந்தமிழ்நூல் மக்கள் மருத்துவனே நின் புகழும்
நின்னை தந்த பேரறிஞ்ஞர் புகளும் நீடு வாழ்க.
மண்ணில் மக்கள் நல்லவண்ணம் வாழவேண்டி
வகையறிந்த பல அறிஞ்ஞர் ஒன்று கூடி
எண்ணினார் இயற்றினார் மக்கள் மருத்துவனாம்
வண்ணமலர் செய்தார் மக்கள்
திண்ணியராய் வாழும் செய்தியெலாம்
சொன்னதய்யா மருத்துவநூல் சிறந்துவாழ்க
கணணின் மணி எம் கல்லூரி குரலாய்யென்றும்
ஒலித்திடுக காலமெல்லாம் நிலைத்து வாழ்க.
நல்லரியமூலிகையின் குணங்கள் கண்டு
நன்மைமிகு மருத்துவமுறைகள் தந்தார்
சொல்லரிய சேதி எல்லாம் தந்து
மக்கள் நோய் தீர்க்கும் வழியும் செய்தார்
பல்லறிஞர் வியக்கும் வகை மருத்துவன் தான்
மக்கள் மனம் நிறைந்ததையா
எல்லோரும் போற்றுமிந்த புகழ் நூலை
தந்திடுவோர் தரணியில் சிறந்து வாழ்க
விஞ்ஞானம் வளர்ந்து பல புதுமை கண்டும்
மரபணுவில் கூட சிலர் மாற்றம் செய்தும்
எஞ்ஞான்றும் இளமையடன் இருக்கும்
சுதேசமருத்தவத்தின் புகழ் நூலே
யாழ்பாணத்தின் நல் வைத்தியர்கள்
கைளிலே வளர்ந்தாய்; வாழி.
மருத்துவனே நோய் தீர்க்கும் மருந்து தந்தாய்
மக்கள் மனங்களிலே நிறைந்தாய் வாழி.
நல்ல அரும் மருந்துகளின்
குணங்கள் கண்டு நோய்
வெல்ல பல முறைகள் சொன்னாய்
மக்கள் மருத்துவனே நின்னை காண
எல்லொரும் ஆசை கொண் டோம்
மாணவரின் முயற்ச்சியினால்
பல்லோரும் போற்றும் வகை.
வந்தாய் வாழி! வாழி!
ந.மணிகரன்
3ம் வருட மருத்துவ மாணவன்
ஞாயிறு, 2 மே, 2010
ஆண்மை குறைவு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், சக்தி கூடும்
மாதுளம் பழம் அதிக சத்துக்கள் நிறைந்தது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது எந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு அதிக நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏற்பட்டிருக்கும். அதுபோன்றவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையும் கூடும்.
முக்கியமாக மாதுளம் பழம் உடலில் தொண்டை, மார்பு, நுரையீரல், குடல் பகுதிகளுக்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.
ஆண்மை குறைவு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், சக்தி கூடும். குழந்தைப் பேறும் ஏற்படும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தவிர்க்க, கெலாக்ஸ் போன்றவற்றுடன் மாதுளம் பழத்தைச் சேர்த்து பால் ஊற்றி சாப்பிட்டால் ரத்த விருத்தி ஏற்படும்.
ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு அதிக நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏற்பட்டிருக்கும். அதுபோன்றவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையும் கூடும்.
முக்கியமாக மாதுளம் பழம் உடலில் தொண்டை, மார்பு, நுரையீரல், குடல் பகுதிகளுக்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.
ஆண்மை குறைவு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், சக்தி கூடும். குழந்தைப் பேறும் ஏற்படும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தவிர்க்க, கெலாக்ஸ் போன்றவற்றுடன் மாதுளம் பழத்தைச் சேர்த்து பால் ஊற்றி சாப்பிட்டால் ரத்த விருத்தி ஏற்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)