செவ்வாய், 12 அக்டோபர், 2010

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.

ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.

ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை இந்த விக்கல் விட்டு விட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.
விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.

விக்கல் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றையும், மார்புப் பகுதியையும், டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல். தன்னிச்சையாக என்றால்...?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப் பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.

ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.

உதாரணம்: வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று காற்று வேகமாக வீசு கிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப் போத லாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக் கையில் ஈடுபட்டு விடுகிறது.

பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான்.

விக்கல் எப்படி ஏற்படுகிறது?

விக்கல் என்றால் என்ன? எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.

அதன் தசைநார்கள் திடீரெனவும் தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படும்போதே விக்கல் ஏற்படுகிறது.

தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவையோ இன்றி உங்கள் கட்டுப்பாட்டை மீறி தானகவே இன்றி நடக்கும் செயற்பாடு எனலாம்.

விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.

பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.

அவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.

குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.

குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்சலையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படுத்தலாம்.

வீட்டுச் சிகிச்சை

அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக்கக் கூடும்.

உதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.

அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.

சில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந்துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon) போன்ற மருந்துகளும் உதவலாம். Chlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide

போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே வாங்கி உபயோகிக்கக் கூடாது.

மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.

குறுகிய நேர விக்கல்கள் பொதுவாக Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு தொடரும் விக்கல்

ஆனால் நீண்ட நாட்களுக்குத் தொடரும் விக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். சில வேளைகளில் சற்று பாரதூரமான நோய்களாலும் ஏற்படுவதுண்டு.

மண்டை ஓட்டுக்குள் அழுத்தம் (Intra cranial Pressure) அதிகரிப்பது, மற்றும் சிறுநீரக நோய்களால் குருதியில் யூறியா (Blood Urea) அதிகரிப்பது ஆகியன காரணமாகலாம்.
எனவே நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் விக்கல் தொடர்ந்தால் மருத்துவரிடம் காட்டி முழுமையான பரிசோதனை செய்வது அவசியமாகும். காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்குவார்.

விக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறதாம்.

நீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும், நீராகாரம் உள் எடுப்பதையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவது உதவலாம்.

எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.

நன்றி: தினக்குரல்
டாக்டர் கந்தையா நவரத்தினம்
நடனமுருகன் வைத்திய நிலையம்.
யாழ்பாணம்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

மக்கள் மருத்துவன்

மனம் நிறைந்தாய் மருத்துவனே.!

செந்தமிழின் தாயகமாம் யாழ்ப்பாணத்தில்
சேர்ந்த புகழ் சித்தவைத்தியத்தின் தொன்மைபேணி
வந்தவர்கள் போற்றும் வகை நல்ல கல்வி தந்து
உயர் கலைக் கோவில் ஆகும்
சித்த வைத்திய கல்லூரி வாழ்க வளர்;ந்திடுக
இந்த வகை புகழ் விளங்க துணையாய் நின்ற
செந்தமிழ்நூல் மக்கள் மருத்துவனே நின் புகழும்
நின்னை தந்த பேரறிஞ்ஞர் புகளும் நீடு வாழ்க.

மண்ணில் மக்கள் நல்லவண்ணம் வாழவேண்டி
வகையறிந்த பல அறிஞ்ஞர் ஒன்று கூடி
எண்ணினார் இயற்றினார் மக்கள் மருத்துவனாம்
வண்ணமலர் செய்தார் மக்கள்
திண்ணியராய் வாழும் செய்தியெலாம்
சொன்னதய்யா மருத்துவநூல் சிறந்துவாழ்க
கணணின் மணி எம் கல்லூரி குரலாய்யென்றும்
ஒலித்திடுக காலமெல்லாம் நிலைத்து வாழ்க.

நல்லரியமூலிகையின் குணங்கள் கண்டு
நன்மைமிகு மருத்துவமுறைகள் தந்தார்
சொல்லரிய சேதி எல்லாம் தந்து
மக்கள் நோய் தீர்க்கும் வழியும் செய்தார்
பல்லறிஞர் வியக்கும் வகை மருத்துவன் தான்
மக்கள் மனம் நிறைந்ததையா
எல்லோரும் போற்றுமிந்த புகழ் நூலை
தந்திடுவோர் தரணியில் சிறந்து வாழ்க

விஞ்ஞானம் வளர்ந்து பல புதுமை கண்டும்
மரபணுவில் கூட சிலர் மாற்றம் செய்தும்
எஞ்ஞான்றும் இளமையடன் இருக்கும்
சுதேசமருத்தவத்தின் புகழ் நூலே
யாழ்பாணத்தின் நல் வைத்தியர்கள்
கைளிலே வளர்ந்தாய்; வாழி.
மருத்துவனே நோய் தீர்க்கும் மருந்து தந்தாய்
மக்கள் மனங்களிலே நிறைந்தாய் வாழி.


நல்ல அரும் மருந்துகளின்
குணங்கள் கண்டு நோய்
வெல்ல பல முறைகள் சொன்னாய்
மக்கள் மருத்துவனே நின்னை காண
எல்லொரும் ஆசை கொண் டோம்
மாணவரின் முயற்ச்சியினால்
பல்லோரும் போற்றும் வகை.
வந்தாய் வாழி! வாழி!
ந.மணிகரன்
3ம் வருட மருத்துவ மாணவன்

ஞாயிறு, 2 மே, 2010

ஆண்மை குறைவு உ‌ள்ளவ‌ர்க‌ள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், ச‌க்‌தி கூடு‌ம்

மாதுள‌ம் பழ‌ம் அ‌திக ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்தது எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அது எ‌ந்த வகை‌யி‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தை அ‌ளி‌க்‌கிறது எ‌ன்பதை பா‌ர்‌க்கலா‌ம்.

ஏதேனு‌ம் நோ‌யினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு அ‌திக நா‌ள் ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌‌ண்டவ‌ர்களு‌க்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். அதுபோ‌ன்றவ‌ர்க‌ள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையு‌ம் கூடும்.

மு‌க்‌கியமாக மாது‌ள‌ம் பழ‌ம் உட‌லி‌ல் தொண்டை, மார்பு, நுரையீரல், குட‌ல் பகு‌திகளு‌க்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.

ஆண்மை குறைவு உ‌ள்ளவ‌ர்க‌ள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், ச‌க்‌தி கூடு‌ம். குழ‌ந்தை‌ப் பேறு‌ம் ஏ‌ற்படு‌ம்.
க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ர‌த்த சோகையை‌த் த‌வி‌ர்‌க்க, கெலா‌க்‌ஸ் போ‌ன்றவ‌ற்றுட‌ன் மாதுள‌ம் பழ‌த்தை‌ச் சே‌ர்‌த்து பா‌ல் ஊ‌ற்‌றி சா‌ப்‌பி‌ட்டா‌ல் ர‌த்த ‌விரு‌த்‌தி ஏ‌ற்படு‌ம்.

திங்கள், 28 டிசம்பர், 2009

மூட்டு வலி (மூட்டுத்தேய்மானம்

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
நன்றி மருத்துவம் இணையத்தளம்
drsothithas@gmail.com

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

அக்கரகாரம்

தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து.

உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் -ஆறும்.

நன்றி- சிவகுமாரின் சித்த மருத்துவம்
dr sothithas@gamil.com

ரத்தத்தில் சர்க்கரை அளவு

ரத்தத்தில் சர்க்கரை அளவு
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு
எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) – 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து… 80 முதல் 140 மி. கிராம் சதவீதத்துக்குக் குறைவாக
கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு…
எதுவும் சாப்பிடாமல்….80 முதல் 120 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து…140 முதல் 160 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.
முக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வரும்போது தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். காபி, டீ, பால், சிகரெட், மது மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
சர்க்கரை நோயாளிகளாக இருக்கும் நிலையில்சாப்பிட்ட பின் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்தே ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும்.

நன்றி HI2
DR.SOTHITHAS
Drsothithas@gmail.com